தமிழகத்தில் 2 நாட்களுக்கு "வெயில் அதிகரிக்கும்" - வானிலை மையம் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஓட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வெயிலின் தாக்கம் காரணமாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம்(Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 degrees Celsius temperature rise in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->