தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. புரட்டிப் போடப் போகும் கனமழை.!!
3 days orange alert in tamilnadu
தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே மூன்றாவது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் ஆகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்த மூன்று நாட்களும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
3 days orange alert in tamilnadu