7:00 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 27 மாவட்டங்கள்...!
27 districts likely to receive rain until 7
சென்னை வானிலை ஆய்வு மையம் ,'தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அவ்வகையில்,விருதுநகர், காஞ்சிபுரம் ,தென்காசிமற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர்,திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மக்கள் மழைக்கேற்றாற்போல் தங்களது பணிகளை முன்னெச்சரிக்கையாக மூடிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
English Summary
27 districts likely to receive rain until 7