7:00 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 27 மாவட்டங்கள்...! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் ,'தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று  தெரிவித்துள்ளது. அவ்வகையில்,விருதுநகர், காஞ்சிபுரம் ,தென்காசிமற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை,  தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர்,திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மக்கள் மழைக்கேற்றாற்போல் தங்களது பணிகளை முன்னெச்சரிக்கையாக மூடிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

27 districts likely to receive rain until 7


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->