தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!! 
                                    
                                    
                                   13 may weather report in tamilnadu
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு  அசானி என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திரா - ஒடிசா மாநிலங்களை மிரட்டி வருகிறது. அசானி புயலால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டது.

இந்நிலையில், அசானி புயலால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       13 may weather report in tamilnadu