ஈசிஆர் சம்பவம் - இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


ஈசிஆர் சாலையில் பெண்களைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் பெண்களை துரத்திச் சென்றதன் காரணம் என்ன என்பது தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youths arrested for chennai ecr incident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->