கடலூர் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபருக்கு நிகழ்ந்த சோகம்...!
Youth killed in floods near cuddalore
ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் தனது நண்பர்களுடன் மணிமுக்தா ஆற்றில் குளிக்க சென்றார். வினோத்குமார் மற்றும் நண்பர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வினோத்குமார் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
அவருடன் வந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் அவர் வெள்ளத்தில் சிக்கினார். உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மணிமுக்தா ஆற்றில் இறங்கி வினோத்குமாரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வினோத்குமார் கீழே பாலையூர் அணைக்கட்டு பகுதியில் சடலமாக கரை ஒதுங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் வினோத் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth killed in floods near cuddalore