கோவை | தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் கோவில் புலிக்குத்தி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (22). சமையல் கலை பட்டதாரியான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ரஞ்சித் குமார் புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜெயிலில் இருந்தார்.

இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ரஞ்சித் குமார் கோவையில் தங்கி இருந்தபோது மூன்று பேரிடம் 17 பவுன் செயின் பறித்துள்ளார். மேலும் அன்னூர் காரமடை உள்ளிட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ச்சியாக செயின் பொறுப்பில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பறித்த நகைகளை எல்லாம் புதுச்சேரி மற்றும் விருதுநகரில் உள்ள அடகு கடையில் வைத்து சொகுசு வாழ்க்கை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரஞ்சித் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth involved in serial chain snatching arrested in kovai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->