முன் விரோதத்தால் இளைஞர் கொலை..!! திருவண்ணாமலையில் பரபரப்பு...!! - Seithipunal
Seithipunal


முன்விரோதத்தால் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வீரானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(24). வெளியூரில் பணிபுரிந்து வந்த இவர் சில நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தனது உறவினரை வீட்டு விஷேசத்திற்கு சென்று உள்ளார். அப்போது அவரை வழிமறித்த  சில மர்ம நபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து ஜி.என்பாளையம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் (33), சுரேஷ் (30), வல்லரசு (26), ஏழுமலை (24) ஆகியோரை கைது செய்தது காவல்துறை. மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பை பலபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth hacked to death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->