காதலியுடன் செல்ல இருசக்கர வாகனம் கேட்ட மாணவர்.. வாங்கி தரமறுத்தால் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


பைக் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை செய்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர்  கன்னியப்பன். இவரது மகன் நாகராஜ்  அங்குள்ள பாலிடெகினில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன் தனது தந்தையிடம் அவர் இருசக்கர வாகனம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், குடும்ப சூழல் காரணமாக அவர் அதற்கு மறுத்துள்ளார். காதலியை அழைத்து செல்ல பைக் வேண்டும் என கட்டாயப்படுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒப்புகொள்ளவில்லை என கூறப்படுகிறது, இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth committed Suicide In Chengalpattu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->