ப்ரீபயர் ஐடியை திருடிவிட்டார்கள் இளைஞர் எடுத்த விபரீத முடிவு...!
Youth committed suicide due to hacking his fire fire id
ப்ரீபயர் விளையாட்டின் யூசர் ஐடி பாஸ்வேர்டை திருடி விட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த ஓராண்டாக நண்பர்களுடன் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ பயருக்கு அடிமையான தாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சஞ்சையின் ப்ரீபயர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மர்ம நபர்கள் திருடியதாக தெரிகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் .
திருடப்பட்ட ஐடியின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என அவர் நண்பர்களிடம் புலம்பி வந்துள்ளார்.இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Youth committed suicide due to hacking his fire fire id