மதுபோதையில் வாகனம் இயக்கிய இளைஞர்... சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை.. இளைஞர் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் வாகனம் ஓட்டி நபரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இளநீர் வியாபாரியான இவர் நேற்று தனது சரக்கு வாகனத்தில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தணிக்கை பணியில் இருந்த காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் சந்தோஷ் குமார் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு வண்டியை காலையில் எடுத்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் அங்குள்ள பெட்ரோல் சென்று பெட்ரோல் வாங்கி தன் மீது ஊற்றி நடுரோட்டில் தீ வைத்துக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாகனம் பறிமுதல் செய்வதற்காக நடுரோட்டில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Attempted Suicide


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->