பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவரும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சித் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ரஞ்சித்தின் குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த தகராற்றின் போது ரஞ்சித்தின் குடும்பத்தார் சிறுமியின் குடும்பத்தாரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested In POCSO Due to Harassing Boy Near Ariyalur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->