அதிக சத்தத்துடன் செல்போனில் படம்.! தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியர்... மது பாட்டிலால் குத்திய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் அதிக சத்தத்துடன் செல்போனில் படம் பார்த்ததை தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியரை மதுபாட்டினால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் ஆதிரத்தனேஸ்வரன் (19). இவர் சேலத்தில் காமராஜர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஹோட்டல் காசாளரான ராமச்சந்திரன்(34), ஆதிரத்தனேஸ்வரன் அறைக்கு வந்தபோது அங்கேயே தூங்கியுள்ளார்.

அப்பொழுது குடிபோதையில் இருந்த ஆதிரத்தனேஸ்வரன் செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்த்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் எழுந்து செல்போனில் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த ஆதிரத்தனேஸ்வரன் மது பாட்டிலை உடைத்து இராமச்சந்திரன் முதுகில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிரத்தனேஸ்வரனை கைது செய்தனர்.

இதையடுத்து விசாரணையில் ஆதிரத்தனேஸ்வரன் மீது பல வழக்குகள் இருப்பதும், வன்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையானதும் தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for stabbing hotel worker with liquor bottle in salem


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->