மாமல்லபுரத்தில் திடீர் பரபரப்பு.. கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்.!!
Young man murder in mamallapuram beach
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் (எ) மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மணிமாறன் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறியதாவது, கடற்கரை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு உள்ளம். இந்த கொலை சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் மணிமாறன் என தெரிய வந்துள்ளது என கூறியுள்ளனர்.
English Summary
Young man murder in mamallapuram beach