மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டங்களுக்கு குறி வைக்கிறார்கள்...! - எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய உதயநிதி...!
targeting women rights funds and Naan Multhulvan projects Udhayanidhi who bought opposition parties
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் சூடுபிடித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்ததுடன், அரசின் செயல்பாடுகள் குறித்து பல முக்கிய கருத்துகளை பதிவு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,"தரையில் நிலவும் உண்மை நிலைக்கும், ஆளுநர் உரையில் சித்தரிக்கப்பட்ட சூழலுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு இருப்பதை தெளிவாக உணர முடிகிறது.இந்த அவையில் எதிர்க்கட்சி வரிசையில் மட்டும் அல்ல, ஆளுங்கட்சி வரிசையிலும் எங்களது ஆதரவு வலுவாக இருப்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதந்தோறும் தொகை தாமதமின்றி வழங்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. அதேபோல், காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடவடிக்கைக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரத்தில், ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை எண்களே பேசுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 41 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டை மட்டுமல்ல, போட்டித் தேர்வுகளுக்கான மாணவர்களின் திறமையையும் உயர்த்தியுள்ளது.
குறிப்பாக, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் பெரும் துணையாக இருந்து வருகிறது. இந்திய அளவில் 2-வது இடத்தை பெற்ற மாணவி ராஜேஸ்வரி கூட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாளி என்பது இந்த திட்டத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய சான்றாகும்"என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
targeting women rights funds and Naan Multhulvan projects Udhayanidhi who bought opposition parties