நாகை: மண் கொள்ளை குறித்து புகார் அளித்த இளைஞர் அடித்து கொலை!
young man killed Vedaranyam Nagapattinam sand robbery
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மண் கொள்ளை குறித்து புகார் அளித்த இளைஞர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கையிலவனம்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரோ ஒருவர் காவல்துறையினரிடம் தகவல் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி இயந்திரத்தை பராமரித்து வந்த சந்திரசேகரனின் மகன் குமார் (35), நேற்று இரவு கையிலவனம்பேட்டையில் வசிக்கும் இம்மானுவேலின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. மண் கொள்ளை புகாரை யார் கொடுத்தார்கள் என்பதைக் குறித்து அவர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் திடீரென ஏற்பட்ட கோபத்தில் இம்மானுவேல், மண்வெட்டியால் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளதோடு, குமாரின் மரணத்தை சுற்றியுள்ள காரணங்களை தெளிவுபடுத்த தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொலை, அந்தப் பகுதியில் நிலவும் மண் கொள்ளை விவகாரத்திற்கு நேரடியான தொடர்பா? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
young man killed Vedaranyam Nagapattinam sand robbery