16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை... வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்..! நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யன்சேரி பகுதியை சேர்ந்தவர் அகிலன்(32). இவர், தென்னேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அகிலன் திருமியை திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அகிலனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய அகிலனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man gets 10 years in jail for impregnating girl in kanchipuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->