திருவள்ளூர் : கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்துள்ளார்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ஆந்திராவில் தனியார் கார் கம்பெனியில் பைனான்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் நண்பர்கள் 5 பேருடன் நேற்று மீஞ்சூரில் உள்ள சீமாவரம் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்பு இவர்கள் அனைவரும் கொசஸ்தலை ஆற்றில் குளித்துள்ளனர். அப்பொழுது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ராஜா திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் ராஜாவை தேடினர். ஆனால் ராஜாவை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டு, இன்று காலை ராஜாவின் உடலை கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man drowned in Kosasthalai river in tiruvallur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->