மர்மமான முறையில் வாலிபர் மரணம்...! விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்பு...! - வேலூரில் பரபரக்கும் விசாரணை!
young man dies mysteriously His body recovered from agricultural well sensational investigation Vellore
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கூட்ரோடு பகுதியில் வசித்து வரும் கோபியின் மகன் தினேஷ் (22), மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 6-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடியும் தினேஷின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர், விரிஞ்சிபுரம் காவலர்களிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இளைஞரின் உடல் மிதப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தினேஷ் தவறி கிணற்றில் விழுந்தாரா? உயிரை மாய்த்துக்கொண்டாரா?அல்லது வேறு ஏதேனும் மர்ம பின்னணி உள்ளதா? என்பது குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
young man dies mysteriously His body recovered from agricultural well sensational investigation Vellore