திருவள்ளூர் || அரசு பேருந்து மோதி தொழிலதிபர் பலி - ஆத்திரத்தில் பேருந்தை சூறையாடிய உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து மோதி தொழிலதிபர் பலி - ஆத்திரத்தில் பேருந்தை சூறையாடிய உறவினர்கள்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தார். 

அப்போது ஆந்திரா மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கண்ணனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man died for govt bus accident in thiruvallur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->