விருதுநகர் : 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருவதால் விடுமுறை நாட்களில் சிறுமியை எதிரில் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று சிறுமையை எதிர் வீட்டில் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது மாரிமுத்து என்ற வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சாந்தி, சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிமுத்துவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for sexually harassing a 9 year old girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->