சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது இந்த சிறுமிக்கு மாமா முறையான சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த செங்கதிர் (32) என்பவரும் அதே வீட்டில் தங்கியிருந்தார்.

இதையடுத்து பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் செங்கதிர் ஆசை வார்த்தைகள் கூறி, அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செங்கதிரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested for raping girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->