16 வயது சிறுமி கர்ப்பம்.! போக்சோவில் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்து உள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து கேட்டனர். அப்பொழுது சிறுமி, சிற்பி முத்துக்குமார் (28) என்பருடனும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் நான் கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சட்டத்தின் கீழ் முத்துக்குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested for 16 year old girl pregnant in sivagangai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->