திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு.. கணவன் மற்றும் மாமியாருக்கு வலைவீச்சு..!
Young Girl Found Dead Near Coimbatore
திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காளியண்ணன் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாலதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை மாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். தலைமறைவாக உள்ள பிரபாகரன் மற்றும் அவரின் தாயார் முறைகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Young Girl Found Dead Near Coimbatore