மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி..! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..! விருதுநகரில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மாரியப்பன் (36). இவருக்கு சொந்தமான மூன்று மாடுகளை காணவில்லை என்பதால் இவர், நண்பர்கள் சிலருடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பு பகுதியில் மாடுகளை தேடி உள்ளார். அப்பொழுது வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாரியப்பனின் உறவினர்கள் மின்வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்பு மாரியப்பனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker trapped in electric fence dies in virudhunagar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->