நீலகிரி அருகே பரிதாபம்.! காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் மாவனல்லா சோகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மாதன் என்ற பொட்ட காலன்(55). இவரது மனைவி மாரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மாதன் நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் வீட்டிலிருந்து மாவனல்லா சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று மாதனை தாக்கியுள்ளது. இதனால் இவர் சட்டம் போடவே ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள், காட்டு யானையை விரட்டி அடித்தனர். மேலும் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த மாதனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker dies after attacked by an elephant in Nilgiri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->