தீபாவளி சீட்டு மூலம் பணமோசடி - கடலூரில் பெண் போலீஸ் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பண்ருட்டி பக்கிரிப்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்திருந்தார்.

மேலும் அவர் தீபாவளி சீட்டும்  நடத்தி வந்தார். தற்போது சீட்டு முடிந்த பிறகு, பணம் கட்டியவர்களுக்கு தரவேண்டிய தங்ககாசு, பணம், பொருட்களை தரவில்லை.  உடனே பணம் கட்டியவர்கள், அவரிடம் சென்று பணத்தை கேட்டபோது கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.

இதன் மூலம் சுமார் 270 பேரிடம் ரூ.33 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், பிரபுவுக்கு உடந்தையாக அவரது மனைவியான ஆயுதப்படை போலீஸ்காரர் கோமளாவும் செயல்பட்டார். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரித்து மோசடியில் ஈடுபட்ட பிரபுவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபுவுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கோமளாவை, நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women police arrested for money fraud from deepavali seet in cuddalore


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->