சென்னையில் மேலும் 250 பிங்க் ஆட்டோக்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில் பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று 250 இளஞ்சிவப்பு (Pink) ஆட்டோக்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை துவக்கினார்.

இதனை தொடர்ந்து, 2-ம் கட்டமாக மேலும் பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்பதால், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பெண்கள் அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கைப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரிகள் 20 முதல் 45 வயது ஆக இருக்க வேண்டும்.
சென்னையில் குடியிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) ஆகிய முகவரிகளில் 6.4.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women pink autos TNGovt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->