சினிமா பட பாணியில் இன்ஸ்டா காதலனுடன் காரில் சென்ற இளம்பெண் - அரியலூரில் பரபரப்பு.!
women escape with insta boy friend in ariyalur
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் பகுதியை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் மகள் அனுசியா. சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, குமரேசன் என்பவருடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்துள்ளனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்றனர். இவர்களின் காதலை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து குமரேசனும் – அனுசுயாவும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி அவர்கள் திருச்சி சென்று அனுசுயாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்துசெல்போனை வாங்கி கொண்டு சகோதரி ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்துள்ளனர். இதை அறிந்து கொண்ட குமரேசன் தனது நண்பர்களுடன் வாடகை கார் மூலம் அனுசுயாவின் ஊருக்கு வந்து தெருமுனையிலேயே காரை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் குமரேசன் தனது நண்பர்கள் மூவரை அனுப்பி, அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் சென்றுள்ளனர். இதனை பார்த்த அனுசியா, காதலனின் நண்பர்களை கண்டதும் அங்கு நிறுத்தி இருந்த காரில் ஏறி தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறார். இதைப்பார்த்த அனுசியாவின் சகோதரி சத்தம் போட்டு கத்தி, கூச்சல் எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பித்துச் செல்வதை தெருவாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women escape with insta boy friend in ariyalur