பேய் பிடித்த பெண்.. நள்ளிரவில் அலறல்.! திகில் தரும் மரணம்.!
women death unknown reason in madhurandhagam
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே கோவிலுக்கு அருள்வாக்கு கேட்க சென்ற பெண் ஒருவரின் பிணம் தற்போது கருகிய நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது.
மதுராந்தகம் அருகே இருக்கின்ற இந்தலூர் கிராமத்தில் இருக்கின்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முருகம்மாள் என்பவருர் மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருகின்றார்.
இந்த நிலையில், சென்னை அருகே தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கம் எனும் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பேய் பிடித்து இருப்பதாகவும்,எனவே பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்றால் குணமாகிவிடும் என்றும் அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் 21 நாட்கள் தங்கி இருக்க பூசாரி உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக அந்த பெண்ணும், அவருடைய தந்தையும் தங்கி இருக்கின்றனர். இத்தகைய சூழலில் நள்ளிரவு 2 மணியளவில் அந்தப் பெண்ணுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். இருப்பினும், அந்த பெண்ணின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் இடத்தில் துடிதுடித்து இறந்து போனார்.
English Summary
women death unknown reason in madhurandhagam