பெண் குளிப்பதை வீடியோ எடுத்து இணையத்தில் விற்க முயன்ற இளைஞர்கள்.. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வேலைபார்த்து வருகிறார். அவருடன் மேலும் பல பெண்களும் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் இரண்டு பேர் குளியல் அறை அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு குத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் மாறி மாறி பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களின் செல்போன்களை காட்டும்படி கூறினர்.

அவர்கள் செல்போன்களை கொடுக்க மறுத்து உடனே அதிலிருந்து சில போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் 2 இளைஞர்களையும் பிடித்து வேளச்சேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவர்களது செல்போனை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் பார்த்தபோது அதில் பெண்கள் குளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில் இருவரும் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், ஸ்ரீராம் என்பது தெரியவந்தது. மேலும் வீடியோக்களை இணையதளத்துக்கு விற்கவும், தனிமையில் இருக்கும்போது பார்த்து ரசிக்கவும் எடுத்ததாக அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்கள் 2 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women bathing video recorded boys in Velachery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->