நாமக்கல்.! வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி மாரியம்மாள்(55).

இவர் கூலி வேலைக்காக எல்லைமேடு பகுதிக்கு சென்று விட்டு, வேலை முடிந்தபின் வீட்டிற்கு மோகனூர் பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரியம்மாள் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று உள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாளை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed in vehicle collision in namakkal


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->