திருமணம் செய்ததால் தொடர்ப்பை துண்டித்த கள்ளகாதலன்.. பெண் துணிகரம்..!
Woman killed his boy friend
திருமணமானதும் தவறான உறவை துண்டித்ததால் இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் ரதீஷ்குமார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராகல் பணியாற்றி வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த ஷீபா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், ரஷீத்திற்கு திருமணமானதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் அவர் அவர் ஷீபாவுடனான உறவை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஷீபா அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன் படி மருத்துவமனையில் பணியில் இருந்த போது அங்கிருந்த கத்தியால் ரதீஷ்குமாரை குத்தி கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman killed his boy friend