ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது தடுமாறி விழுந்து பலி.. திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் ரயில் சிக்கிய பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம், ஓ.லட்சுமிநாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் லிங்குசாமி. இவரது மனைவி பேபி  சாந்தி. இவர் தனது சகோதரி மகள் திருமணத்திற்காக செங்கல்பட்டு செல்ல கோவில்பட்டி ரயில்நிலையத்திற்கு வந்துள்ளார்.அப்போது நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யதா பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக முன்பதிவு செய்த பெட்டியில் தவறுதலாக ஏறியுள்ளார்.

தவறுதலாக ஏறியதை அறிந்த அவர் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதால்  தடுமாறி ரயிலினுள் விழுந்துள்ளார். இதில், அவர் ரயிலின் அடியில் சிக்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman falls in the train track and died


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->