கொரோனாவால் உயிரிழந்த கணவன்.. நினைவு தினத்தில் மனைவி செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


கணவன் இறந்த நாளில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். பழனிசாமி கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சாந்தி கணவரின் நினைவாகவே இருந்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில்,  மகன் வீட்டில் வசித்து வந்த சாந்தி திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனைக் கண்ட அவரது மகன் விசாரித்த பொழுது கணவர் இறந்த அதே நாளில் தானும் சாக முடிவெடுத்து விஷமருந்தியதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை இழந்த மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman committed Suicide in His husband death anniversary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->