மதுவுக்கு அடிமையான கணவன்., தினம் அடி உதை தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்...!!
Woman Committed suicide due to family issue
கணவன் குடித்து விட்டு வந்து தினம் தொல்லை செய்வதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பிரபு. இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபுவிற்கு குடிபழக்கம் இருந்ததால் தினம் மனைவியுடன் தகராற்றில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற தகராற்றால் நந்தினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து அங்கு சென்ற பிரபு மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை நந்தினி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்ட அவரது மகள் அழுது கொண்டு அருகில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்த போது நந்தினி நிர்வாணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
அருகில் அவரது கணவர் குடி போதையில் சுயநினைவின்றி படுத்திருந்தார். இதனை அடுத்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பிரவு மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் அதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Woman Committed suicide due to family issue