திருவண்ணாமலை.! விஷம் குடித்து பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு வேடக்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி விஜயலட்சுமி(30). இவர் நேற்றிரவு விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு விஜயலட்சுமியை சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சந்தவாசல் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, விஜயலக்ஷ்மி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman commits suicide by drinking poison in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->