வேளச்சேரி அருகே ஏரியில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


வேளச்சேரி அருகே ஏரியில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.!

சென்னை வேளச்சேரியில் சசிநகர் பகுதியில் உள்ள ஏரியில் பச்சிளம் குழந்தையின் உடல் மிதப்பதாக நேற்று அப்பகுதி மக்கள் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்துச் சென்று குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் குழந்தையை கொலை செய்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில், வேளச்சேரி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் குழந்தையை ஏரியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சங்கீதாவை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, சங்கீதாவுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையே சங்கீதாவுக்கும், அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் நபருடன் தகாத உறவு ஏற்பட்டு அதில் சங்கீதா கர்ப்பிணியானார்.

இதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த சங்கீதாவிற்கு கடந்த 2-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென பிரசவவலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதன் பின்னர் சங்கீத இந்த சம்பவம் குறித்து கணவருக்கு தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என்று எண்ணி குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி கொலை செய்து விட்டு ஏதும் தெரியாது போல் வீட்டிற்கு திரும்பி சென்றது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலீஸார் சங்கீதா மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill baby in chennai velachery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->