முதியவரைக் கரண்டியால் தாக்கிய பெண் கைது - வாலிபருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


முதியவரைக் கரண்டியால் தாக்கிய பெண் கைது - வாலிபருக்கு வலைவீச்சு.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் கொடுங்கையூர் அருகே சோப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஆதிமூலம் இரவு 10 மணி அளவில், எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சாப்பிடச் சென்றுள்ளார்.

அதன் படி ஆதிமூலம் அங்கு சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளார். அப்போது டிபன் கடை நடத்தி வரும் விஜயகுமாரி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற வாலிபருடன் சேர்ந்து ஆதிமூலத்திடம் சாப்பிட்டதற்கான பணம் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ஆதிமூலம் தாம் பணம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே வாக்குவாதம் முற்றியதில், விஜயகுமாரி கடையில் இருந்த இரும்பு கரண்டியை எடுத்து ஆதிமூலம் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இந்தத் தாக்குதலில் ஆதிமூலம் படுகாயம் அடைந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். 

அதன் படி போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கிய விஜயகுமாரியை கைது செய்தனர். மேலும் அவருக்கு துணை நின்ற கவுதம் என்பவரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பேரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman arrested for attack old man in cuddalore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->