கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.! மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபா(32).

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுபா வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் உயிரிழந்த சுபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife commits suicide in Villupuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->