காய்கறி மார்கெட் கூலித் தொழிலாளிகளுக்கு சங்கம் இல்லாதது ஏன்?தமிழ்புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன் கேள்வி!
Why is there no union for vegetable market coolie workers? This is the question posed by Tamil Tigers party leader Thiruvalluvar
காய்கறி மார்கெட் கூலித் தொழிலாளிகளுக்கு சங்கம் இல்லாதது ஏன் என ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற தமிழ்புலிகள் கட்சி பொதுக்கூட்டத்தில்நாகை.திருவள்ளுவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் தொழிலாளர்களின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் க. சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட நிதி செயலாளர் ஆட்டோ முருகன், மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் சுதன், தொகுதி செயலாளர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் அழகு வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் தமிழ் பாண்டியன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசியதாவது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாட்டின் 2வது பெரிய காய்கறி மார்க்கெட் காந்தி காய்கறி மார்க்கெட்தான் அங்கு முதலாளிகளுக்கு சங்கம் உள்ளது.ஆனால் உடலை வருத்தி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஏன் சங்கம் இல்லை? எனக் கேள்வி எழுப்பினார்!
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இப்பகுதியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன.அந்த கோவில்களுக்குள் சமூக நீதிபடி பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? 3% உள் ஒதுக்கீடு பெற்றதினால் மட்டுமே அருந்திய சமூக மக்கள் தற்போது சில இடங்களில் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் இந்த 18 % இட ஒதுக்கீடு இருக்கும்போது இச்சமூக மக்கள் பயன்பெற்றனரா? என்றால் இல்லை. நாங்கள் பிராமண்ய கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறோம்! அண்ணல் அம்பேத்கார் , பெரியார்,கார்ல் மார்க்ஸ், உள்ளிட்ட கொள்கை தலைவர்களின் வழியில் தொடர்ந்து செல்வோம் என நாகை. திருவள்ளுவன் எழுச்சி உரையாற்றினார்,
இந்நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் கரு. சித்தார்த்தன்,ம. முகிலரசன், தலைமை நிலை செயலாளர் ராவணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் க. சின்ன கருப்பன், துணை கொள்கை பரப்புச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில துணை அமைப்பு செயலாளர் மருதை போஸ், மாவட்டச் செயலாளர்கள் கரு. இரணியன், மாரிமுத்து, கருப்புசாமி, கணேச பிரகாஷ்,பிரவீன் குமார், உழவர் அணி செயலாளர் செல்லமுத்து, கரும்புலி குயிலி பேரவை செயலாளர் சி சரோஜா, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் விருமாண்டி, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்
அர்ஜுன்வள்ளுவன் மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் பாலாஜி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மு. பால்ராஜ், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுஜித் வள்ளுவன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் மகுடீஸ்வரன்,
ஒன்றிய துணைச் செயலாளர் வேல்ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் நகர பொருளாளர் சிவா, ஒட்டன்சத்திரம் நிதி செயலாளர் காளிமுத்து ,நகர துணை செயலாளர் பாஸ்கர் கரும்புலி குயிலிபேரவை காளியம்மாள், வடக்கு ஒன்றியம் முருகம்மாள், முன்னாள் மாவட்ட செயலாளர் அழகு பாண்டியன், ஒன்றிய உழவர் அணி செயலாளர் கீரனூர் தங்கவேல், கரும்புலி குயிலி பேரவை நகரச் செயலாளர் லட்சுமி, கிளைச்செயலாளர்கள் லெக்கையன்கோட்டை ராம்தாய், அத்திக்கோம்பை வசந்த், மூனூர் நாகப்பன்பட்டி பெருமாள், தங்கச்சியம்மாபட்டிசேதுபதி, விருப்பாச்சி பாக்கியம், அம்பளிக்கை அருண் ,சக்கம்பட்டி சண்முகவேல், மண்டவாடி ஈஸ்வரி, வெள்ளியன்வலசு அசோக், கூடலிங்கபுரம் அம்பிகா, சத்யா நகர் ரோகிணி,கழக ஓவியர் ரகுபதி மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் தமிழ் புலிகள் கட்சி மண்டல,பாராளுமன்ற,மாவட்ட,ஒன்றிய,நகர அனைத்து நிர்வாகிகளுக்கும் நகரச் செயலாளர் விடுதலை குமார் நன்றி தெரிவித்தார்.
English Summary
Why is there no union for vegetable market coolie workers? This is the question posed by Tamil Tigers party leader Thiruvalluvar