கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் ஒருவர் பலி!
Another person has died in Chennai due to the coronavirus infection
மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள் நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவருக்கு இதய செயலிழப்பும் ஏற்பட்டதால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 29-ந் தேதி மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக, புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
அதில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த 1-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான முக்கிய காரணம் இணைநோய்கள்தான் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Another person has died in Chennai due to the coronavirus infection