வாகன ஓட்டிகள் ஹேப்பி...! காவல் ஆணையர் அருண் விதித்த புதிய உத்தரவு என்ன...? - Seithipunal
Seithipunal


போக்குவரத்து விதிகள், சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு காவலர்கள் விதித்தது.இதன்மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள், அபத்தங்கள், அறிவுரை வழங்குதல் போன்றவை வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.மேலும், காவலர்களை கண்டதும் அபராதம் பயத்தால் வாகனத்தை திருப்பி ஓட்டி செல்கின்றனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் ''அருண்'':

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் ''அருண்'' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, ''25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில்,

  1. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல்.
  2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்.
  3. வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல்.
  4. நோ எண்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல்.
  5. இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லுதல்

ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தற்போது மக்களிடையே வரவேற்க தக்க விதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What new order issued by Police Commissioner Arun


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->