அக்டோபர் 14: சென்னைக்கு நாள் குறித்த பாலச்சந்திரன்! அடுத்த ஒரு வாரம் இதான் நிலைமை! - Seithipunal
Seithipunal


அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் தெரிவித்தாவது, வங்கக் கடலில் உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக அக்டோபர் 14ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Weather Update TN and chennai Rains


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->