ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் நீர்வரத்து...! ஒரே இரவில் 14,000 கன அடியாக அதிகரிப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழக  மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, கேரட்டி,பிலிகுண்டுலு, ஓசூர், கனகபுரா, அஞ்செட்டி, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இதனால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8000 கனஅடியாக அதிகரித்தது.அதன் படி, இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து காலை 8,000 கனஅடியிலிருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது.

மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து கண்காணித்து வருகின்றனர்.மேலும்சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரை எந்தவித எச்சரிக்கையும் விடவில்லை.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Water inflow in Hokenakkal is exploding Increases to 14000 cubic feet overnight


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->