தர்மபுரி ஒகேனக்கலில் 16000 கன அடியாக குறைந்த நீர் வரத்து!
Water inflow in Dharmapuri Okenakkal has decreased to 16000 cubic feet
கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர்,கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழுமையாக நிரம்பி விட்டன.

மேலும், அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18000 கனஅடி தண்ணீர் வந்தது.
கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 16000 கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் நின்று குளித்து மகிழ்ந்தனர்.மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Water inflow in Dharmapuri Okenakkal has decreased to 16000 cubic feet