ஒரே நாளில் 19 ஆயிரம் கன அடி வித்தியாசத்தில் குறைந்த ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால்,கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டது.

மேலும், அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43000 கனஅடி தண்ணீர் வந்தது.மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.

இதனால் இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 24000 கனஅடியாக குறைந்தது வந்தது.இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Water flow in Hogenakkal reduced by 19 thousand cubic feet single day


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->