மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.. வீதியிலேயே பிறந்த அழகிய பெண்குழந்தை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் உப்பத்தூர் பகுதியில் 35 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள சாலை பகுதியில் தங்கியிருந்து சுற்றிவந்த நிலையில், இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், அவசர ஊர்தி மூலமாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விருதுநகர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்மணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமாகியுள்ளார்.

இவரை காணாது அங்குள்ள பல பகுதிகளில் மருத்துவமனை ஊழியர்கள் தேடி வந்த நிலையில், பெண்ணிற்கு விருதுநகர் கால்நடை மருத்துவமனை அருகே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நடுரோட்டியில் பெண் குழந்தையை பெண்மணி பெற்றெடுத்துள்ளார். 

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவசர ஊர்தி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் பெண்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பெண் பல இடங்களில் சுற்றியிருக்க வாய்ப்புள்ளது என்பதால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virudhunagar mentally challenged girl delivery baby in road


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->