கனமழை - விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
vilupuram district school and colleges holiday tomarrow for rain
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்றது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்ட இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது.
நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
vilupuram district school and colleges holiday tomarrow for rain