காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! வேன் டிரைவர் கல்லால் அடித்து கொலை.! வாலிபர்களின் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் வேன் டிரைவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், பாவாபேட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் அயூப் கான்(50). இந்நிலையில் நேற்று இரவு சவாரி சென்றுவிட்டு வந்த அயூப் கான், ரங்காசாமி குளம் அருகே வேலை நிறுத்திவிட்டு மது குடித்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக குடி போதையில் வந்த இரண்டு வாலிபர்கள், அப்யூகான்யிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து இவர்களிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கீழே கடந்த கல்லால் அயூப்கானை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அபியூகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, சேக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (20) மற்றும் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Van driver stoned to murder in kanchipuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->